×

3ம் தேதி நடக்கிறது பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் ஐஎஸ்டிஇ அமைப்பின் மாநாடு

சிவகாசி, மே 1: சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஐ.எஸ்.டி.இ. அமைப்பின் 22வது ஆண்டு மாநாடு சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் வரும் 3ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்சிக்கு ஜோஹோ கார்ப்பரேஷன், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர்வேம்பு, அமெரிக்காவின் இன்டெல் நிறுவனத்தின் பொறியியல் முன்னாள் இயக்குநர் ஆனந்தன்அய்யாச்சாமி, புதுடெல்லி ஐ.எஸ்.டி.இ. தலைவர் டாக்டர் பிரதாப்சின்காகஷேப் தேசாய், தமிழ்நாடு ஐ.எஸ்.டி.இ. தலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் பேராசிரியர் சௌரிராஜன்,

துணைத்தலைவர் பாஸ்கர், ஐசிடி அகாடமி மாநில தலைவர் பூர்ணபிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான பேப்பர் பிரஷண்டேசன், புராஜெட் கான்டெஸ்ட், டெக்னிக்கல் வினாடி வினா, பயிற்சி வகுப்புகள் போன்ற பல்வேறு தொழில்நுட்ப போட்டிகள் நடைபெறுகின்றன.

The post 3ம் தேதி நடக்கிறது பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் ஐஎஸ்டிஇ அமைப்பின் மாநாடு appeared first on Dinakaran.

Tags : ISTE ,BSR College ,of Engineering ,Sivakasi ,PSR College of Engineering ,Tamil Nadu ,PSR College of ,Engineering ,Joho Corporation ,BSR College of Engineering ,Dinakaran ,
× RELATED ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பரிசுத்தொகை